Posts

குருதிப்புனல் வாசிப்பு

வரலாற்றில் கொடூரங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை. தர்மம் என்றும் அறம் என்றும் மானுடம் தனக்கு விதித்துக் கொண்ட உயர் லட்சியங்களுக்கும் அதன் பேராசை மற்றும் சுயநலத்திற்கும் இடையே நிகழும் நிரந்தர போராட்டத்தின் வழியே வரலாறு செல்கிறது. ஒவ்வொரு நிலையிலும் நியாயமும் தர்மமும் வெல்கிறது என்றாலும் அந்த வெற்றிக்கு ஈடாக அது அளிக்கும் விலை அதிகம். சுதந்திர இந்தியாவில் அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றும் குலை நடுங்க வைப்பவை. 1968ல் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி கிராமத்தில் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் நிலவுடைமையாளர்களால் குடிசைக்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். விவசாய கூலிகளான தலித்துகள் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தங்களது கூலியை உயர்த்திக் கேட்டதே இந்த கொடூரத்திற்கான முகாந்திரம். அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு முதன்மை குற்றவாளி.இந்த நிகழ்விற்கு மிகச் சில நாட்கள் முன்பு நாயுடுவின் ஆட்களில் ஒருவர் தொழிலாளிகளுடனான கைக்கலப்பில் கொல்லப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகளும் இணையாக நடத்தப்பட்டு 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட முதல் வழக்கில் போதிய சாட்சிகள் இல்

இருள்மெய்யறிதல் - 1

                                (1) ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கை என்பது மிகவும் வரையறுக்கப்பட்ட ஒன்று. சுவாரஸ்யமான நிகழ்வுகளோ வாழ்வை முற்றிலும் மாற்றியமைக்க்கூடிய அறிதல்களோ மிக அரிதாகவே அமையும். விழித்திருக்கும் ஒவ்வொரு கணமும் கடமை என்பது நம்மை உயிரோடு விழுங்கும் சித்திரவதையாகவே இருக்கும்.  நாம் விரும்புகிற எதையும் அடைய விடாமல் சரியாக விரும்பாதவற்றை  வலுக்கட்டாயமாக நம்மிடம் திணிக்கும். கடமை , உறவு, பயணம் ,  லக்ஷியம் என எதிலும்  நம் தேர்வை செயலிழக்க வைத்து தோல்வியை சுவைக்க வைக்கும்.  மிகச் சிறுபான்மை தவிர்த்து பெரும்பாலானோர் இந்த சுழலை ஏற்றுக் கொண்டு அதன் போக்கிலேயே செல்வார்கள். அந்த சிறுபான்மையில் பெரும்பான்மை இந்த சுழலை அறிய முயல்வார்கள்.மீதமுள்ள மிகச் சிறுபான்மையே இந்த பெரும் வாழ்க்கைச்சுழலை வெல்ல முயற்சிப்பார்கள். அசாத்திய வலிமையும் சங்கல்பமும் விடாமுயற்சியும் கொண்டு வாழ்வுடன் போராடுவார்கள். அவர்களையே நாம் வழிகாட்டிகளாக , பேராளுமைகளாக நிலைநிறுத்த வழிபடுகிறோம். வென்றாலும் தோற்றாலும் அவர்கள் தங்களது முயற்சிகளாலேயே நினைவுகூரப் படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை தலைமுறை தலைமுறையாக படிக்கப

புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் -2

கார்ல் மார்க்ஸின் உண்மையான கோட்பாடு      இப்போது கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவரால் முன்வைக்கப்பட்டபடி பார்ப்போம் . ஐயமின்றி அவர் நவீன பொதுவுடைமைவாதம் அல்லது கம்யூனிஸத்தின் தந்தையே . ஆனால் அவர் வெறுமனே பொதுவுடைமைவாதக் கொள்கைகளை முன்மொழிவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை . வெகுகாலத்திற்கு முன்னரே அச்செயல் பலரால் செய்யப்பட்டுவிட்டது . மார்க்ஸ் தனது பொதுவுடைமைக் கொள்கை அறிவியல்பூர்வமானது என்று நிரூபிப்பதிலெயே ஆர்வம் கொண்டிருந்தார் . முதலாளித்துவர்களுடனான அவரது போராட்டம் , நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைப் பொதுவுடமையாளர்கள் என்று அவரால் குறிப்பிடப்பட்டவர்களுடனான போராட்டத்திற்குச் சமமானது . இருதரப்பினரையுமே அவர் விரும்பவில்லை . இக்குறிப்பு முக்கியமானது ஏனெனில் மார்க்ஸ் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அறிவியல்கூறுகளுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தார் . அவரால் முன்மொழியப்பட்ட அனைத்து கொள்கைகளும் தனது பொதுவுடைமைக் கொள்கை நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனையல்ல மாறாக அறிவியல்பூர்வமானது என்ற அவரது வாதத்தை நிறுவுவதற்கான திட்டமன்றி வேறெதற்குமல்ல . அறிவியல்பூர்வமான பொதுவுடைமைவாதம் என்று மார்க்ஸ் கூறுவது , அவரது க

கருணை

இனி தாள முடியாது. இருண்ட ஆழத்தில் ஒளித்து வைத்திருந்த வலி. ஒவ்வொரு நாளும் கனவிலும் நனவிலும் தாண்டவமாடும். ஒவ்வொரு அணுவிலும் புகுந்து துடிதுடிக்க வைக்கும். உபாதை வெளித் தெரியாமல் மறைக்கவே முழு ஆற்றலும் செலவாகும். எனது வலி. நான் அனுபவித்துத் தீர்க்க வேண்டியது. துளித்துளியாய் மரணத்தின் அருகே சென்று கொண்டிருந்தேன்.   திடீரென வந்தது ஆசிர்வாதம் ஒன்று. கனிந்த கைகளால் தேவனின் கருணை என்னை தீண்டியது. அமைதி என்றால் என்ன என்று அறிந்தேன்.  கருணை என்னும் வற்றாத ஊற்றருகே தாகத்தில் தவித்த மூடன் நான். துயரில் துணையாக , வலியில் மருந்தாக அருகிருக்கும் என் சுமையை இறக்கி வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். -

நுழைவுத்தேர்வும் சமூக நீதியும்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு விஷயம் அரசியல் காரணங்களுக்காக மிகத் தவறாக கையாளப்படுகிறது. உண்மையில் நுழைவுத்தேர்வு அவசியமா? அவசியம் என்றால் ஏன்?   தமிழ்நாட்டை மட்டுமே வைத்துப் பார்ப்போம். நான் படிக்கையில் +1 பாடங்கள் அரையாண்டு வரை மட்டுமே கற்பிப்பார்கள். கற்பிப்பது என்றால் இங்கு பாடப்புத்தகங்களை வகுப்பில் அப்படியே வாசித்துக் காட்டி விட்டு , பிறகு ஒவ்வொரு அலகின் பின்னாலிருக்கும் கேள்விகளுக்கான பதில்களை அந்த அலகிலேயே குறித்து கொடுத்து, வார்த்தை மாறாமல் மனப்பாடம் செய்து எழுதுவது மட்டுமே. கணிதம் என்றால் வினாவுக்கான விடையின் ஒவ்வொரு படிநிலையையும் மனனம் செய்து பிழையில்லாமல் எழுதுவது. வேறு எதுவுமில்லை.  அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நேரடியாக +2 பாடங்களை மேற்கண்ட முறையில் கற்பிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கற்பிக்கும் முறையில் ஒரு பாடத்தின் மீது நமக்கு வரும் மெல்லிய ஆர்வம் கூட துடைத்து எறியப்படும். வெறும் உயிருள்ள அச்சடிக்கும் எந்திரமாக மாற்றப்படுவோம். ஒரு பாடத்தை உதாரணமாக நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட வெறும் வார்த்தைகளாகவே நமக்கு அளிக்கப்படும். இந்த மூன

புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் - 1

 ( மாமேதை அம்பேத்கர் எழுதிய Buddha  or Karl Marx  என்னும் கட்டுரையின் மொழியாக்கம் )      புத்தரையும் கார்ல் மார்க்ஸையும் ஒப்பிடுவது ஒரு நகைச்சுவையாகக் கருதப்படலாம். அதில் வியப்படைய ஒன்றுமில்லை . மார்க்ஸும் புத்தரும் 2681 வருட காலங்களால் பிரிக்கப்பட்டுள்ளனர். புத்தர் 563 பொ . யு. முன்னும்   கார்ல் மார்க்ஸ் 1818ம் ஆண்டும் பிறந்தனர். மார்க்ஸ் ஒரு புதிய பொருளாதார சமூக அரசியல் அமைப்பை கட்டமைத்தவராக கருதப்படுகிறார் . மறுபக்கம் புத்தாரோ அரசியலோடும் பொருளாதாரத்தோடும் தொடர்பற்ற ஒரு மதத்தின் நிறுவனர். மிக நீண்ட கால வேறுபாட்டினாலும் , முற்றிலும் வெவ்வேறு துறைகளில் இயங்கியவர்களாகிய இந்த ஆளுமைகளுக்குள் ஒப்பீடும் வேறுபாடும் காண்பது சற்றே புதிராக இருக்கலாம். மார்க்ஸிஸ்டுகள்   இந்த முன்னெடுப்பையே சிரிப்புடன் நிராகரித்து விடுவார்கள்.மார்க்ஸ் மிக நவீனமானவர். புத்தாரோ மிகப் பழமையானவர். மார்க்ஸ்சுடன் ஒப்பிடும் போது   புத்தர் மிகப் பழமையானவர் என்று மார்க்ஸிஸ்டுகள் சொல்லக்கூடும் . இந்த இரு ஆளுமைகளுக்கு இடையே என்ன   ஒப்பீடு இருக்க முடியும்? புத்தரிடம் இருந்து ஒரு மார்க்சிஸ்ட் என்ன கற்றுக் கொள்ள முடியும்? ப