குருதிப்புனல் வாசிப்பு
வரலாற்றில் கொடூரங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை. தர்மம் என்றும் அறம் என்றும் மானுடம் தனக்கு விதித்துக் கொண்ட உயர் லட்சியங்களுக்கும் அதன் பேராசை மற்றும் சுயநலத்திற்கும் இடையே நிகழும் நிரந்தர போராட்டத்தின் வழியே வரலாறு செல்கிறது. ஒவ்வொரு நிலையிலும் நியாயமும் தர்மமும் வெல்கிறது என்றாலும் அந்த வெற்றிக்கு ஈடாக அது அளிக்கும் விலை அதிகம். சுதந்திர இந்தியாவில் அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றும் குலை நடுங்க வைப்பவை. 1968ல் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி கிராமத்தில் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் நிலவுடைமையாளர்களால் குடிசைக்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். விவசாய கூலிகளான தலித்துகள் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தங்களது கூலியை உயர்த்திக் கேட்டதே இந்த கொடூரத்திற்கான முகாந்திரம். அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு முதன்மை குற்றவாளி.இந்த நிகழ்விற்கு மிகச் சில நாட்கள் முன்பு நாயுடுவின் ஆட்களில் ஒருவர் தொழிலாளிகளுடனான கைக்கலப்பில் கொல்லப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகளும் இணையாக நடத்தப்பட்டு 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட முதல் வழக்கில் போதிய சாட்சிகள் இல்